Saturday, May 22, 2010

Wednesday, May 19, 2010

பெற்றோர்களே சுயநிதிக் கல்லூரிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

...

இன்று பிளஸ் டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களிடையே என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்கிற கவலை ஏராளமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கவலை ஒட்டிக் கொண்டு விட்டது.

மருத்துவம் படிக்கலாமா? பொறியியல் படிக்கலாமா? வேளாண்மை படிக்கலாமா? அல்லது சமையல் கலையைப் படிக்கலாமா? எதைப் படித்தால் கை நிறையச் சம்பாதிக்கலாம்? எதைப் படித்தால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லலாம்? என்று அவர்களுக்குள் ஆயிரம் கேள்விகள்...

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடி சிலர் ஏற்கனவே படிப்பை முடித்து தற்போது நல்ல வேலையிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் தேடிப் போகிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கல்லூரிகளில் எந்தப் படிப்புக்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது? அந்தப் படிப்பு எந்தக் கல்லூரிகளில் எல்லாம் இருக்கிறது? என்று கடந்த ஆண்டு பிள்ளைகளின் படிப்புகளுக்காக அலைந்த பெற்றோர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கல்லூரிகளின் பட்டியலையும் அங்கிருக்கும் படிப்புகளையும் விசாரணை செய்து தெரிந்து வைத்துக் கொள்ளும் சிலரும் உண்டு.

தங்கள் பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்கிற விபரமே தெரியாமலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பொதுவாகப் பெற்றோர்கள் ஒரு விஷயத்தை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தங்கள் பிள்ளைக்கு எந்தப் படிப்பின் மீது அதிக ஆர்வமுள்ளது என்பதுதான். அந்த ஆர்வம் உண்மையானதா அல்லது அவனுடன் படித்த நண்பர்கள் அந்தப் படிப்பின் மீது ஆர்வமாய்ச் செல்வதால் இவனும் அவனுடன் சேர்ந்து சொல்கிறானா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் சிறப்பாகத் தேர்ச்சி அடையவும் முடியும்.

இப்படி உண்மையிலேயே உங்கள் பிள்ளைக்கு ஆர்வமான படிப்பு என்று தெரிந்தால் அந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்தவர்களிடம் அந்தப் படிப்பு பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அந்தப் படிப்பு படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதற்கான இடங்கள், சம்பளம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு போன்றவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு, அந்த படிப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளில் இருக்கிறது? அந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியா? அரசு உதவி பெறும் கல்லூரியா? அல்லது சுய நிதிக் கல்லூரியா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தங்கள் தேர்வு முதலாவதாக இருக்கலாம். ஏனென்றால் அங்கு தேவையான கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகம், இணைய வசதிகள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.

சுயநிதிக் கல்லூரிகளென்றால் முன்பே அந்தக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா? கல்லூரிக்கு மத்திய / மாநில அரசின் தொடர் அங்கீகாரம் (Continuing Approval / Recognition), பல்கலைக் கழகத்தின் தொடர் இணைப்பு (Continuing Affiliation) பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்றிருக்கும் சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள போதுமான வசதிகளில்லாமல், வசதி குறைவு காரணமாக அந்தக் கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டிருக்கலாம்.

பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டிடங்களை அழகாகக் கட்டி வைத்திருப்பார்கள். அங்கு தகுதியான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இல்லாத நிலை இருக்கும். இதை எப்படி தெரிந்து கொள்வது? என்பது என்கிற உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். அங்கு பயிலும் மாணவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். தாங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரியின் முதல்வராக இருப்பவர் முன்பு எங்கு பணியிலிருந்தார்? தகுதியானவர்தானா? அவர் இந்தக் கல்லூரியில் சிறப்பாகச் செயல்படுகிறாரா? தேவையான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்களா? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்தக் கல்லூரியின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்படி அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருக்கும் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்துதான் இருக்கும்.

சில கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள் பெயருக்குத்தான் இருக்கும். பாடத் திட்டத்திற்கு ஏற்ற கருவிகளோ, பொருட்களோ அங்கு இல்லாத நிலையிருக்கும். இதை அங்கு படித்து வரும் அல்லது படித்து முடித்த மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லூரிகளில் படிப்பதால் படித்து முடித்த படிப்புகளுக்குரிய செயல்முறைப் பயிற்சியில்லாமல் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின் போது தவிக்க நேரிடும்.

இதே போல் வளாகத் தேர்வுகளுக்கு கல்லூரி நிர்வாகம் கடந்த ஆண்டு எடுத்த முயற்சிகள் மற்றும் அதில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கு பெற்றன? எத்தனை மாணவர்கள் பணிக்கான வாய்ப்புகள் பெற்றனர்? போன்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சில கல்லூரிகளில் பெயருக்கு நாம் கேள்விப் படாத சிறு நிறுவனங்களின் பெயரில் வளாகத் தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாமல் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலையிருக்கும்.

இதுபோல் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் தேவையில்லாமல் அடிக்கடி அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாகச் செலுத்தச் சொல்லும் நிலையும் உள்ளது. இங்கு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்தான். நிர்வாகத்தின் பணத் தேவைகளுக்கு ஏற்ப அடிக்கடி அபராதம் விதிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த கல்லூரிகளையும் நாம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது போன்ற கல்லூரிகளில் நம் பிள்ளைகளின் படிப்பு போய்விடக் கூடாதே என்கிற நிலையில் அவர்கள் விதிக்கும் அதிக அளவிலான அபராதத் தொகையை எந்தவித ரசீதுகளுமில்லாமல்
அடிக்கடி நாமசெலுத்த வேண்டியிருக்கும்.

கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் யாரென்பதையும் கூடத் தெரிந்து கொள்ளுங்கள். சில நிர்வாகங்கள் அந்த கல்லூரியில் எந்த வசதியும் செய்து கொடுக்காமல் வேறு புதிய கல்லூரி அல்லது புதிய நிறுவனத்தினை உருவாக்கும் நோக்கத்துடன் கல்லூரிக்கு வரும் பணம் அனைத்தையும் மாற்றி விட்டு கல்லூரியில் பணியிலிருப்பவர்களுக்கு கூட மாதந்தோறும் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் பணியிலிருப்பவர்களுக்கு பணியில் ஈடுபாடில்லாமல் அந்தக் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கும்.

இப்படி சுயநிதிக் கல்லூரிகளில் சில தரம் குறைந்திருந்தாலும் பல சுயநிதிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமான வசதிகளுடன் இருக்கின்றன. படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இது போன்ற நல்ல சுயநிதிக் கல்லூரிகளைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமையும். கூடவே அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

-தாமரைச் செல்வி

நன்றி:http://www.muthukamalam.com


Monday, May 17, 2010

சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி

எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி

1660. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும்பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6066 அபூ ஹுரைரா (ரலி)

------------------

எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி

1658. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பதுஅனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6065 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1659. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பதுஅனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6077 அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி).

நன்றி:http://www.islamkalvi.com

Monday, May 10, 2010

உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?




குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா?

சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த‌ 18 விடியோக்களையும் பாருங்கள்.

இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும்.

சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.


Quran or bible debate between dr. zakir naik and dr. william cambell christian and Muslims all should watch this debate.

கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.


இது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.


முதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம். சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 1
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 2
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 3
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 4
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 5
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 6
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 7
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 8
அசிங்கங்கள், அபத்தங்கள், விஞ்ஞான முரண்பாடுகள்
இதிலுள்ள‌ அப‌த்த‌ங்க‌ளை அசிங்கங்களை, அபத்தங்களை, விஞ்ஞான முரண்பாடுளை இறைவனிட‌மிருந்து வ‌ந்த‌து என‌ கூற‌லாமா?

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது

யாருடைய உண்ர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை

பைபிளில் விஞ்ஞான‌ பிழைக‌ள்.

பூமி அழியுமா? அழியாதா?

இவ்வுலகம் எப்படி முடிவுக்கு வாரும் என்று பல் வேறு விஞ்ஞானிகள் ஊகக்கருத்துக்களை தருகிறார்கள். சிலர் சொல்வது சரியாகவும் சிலர் சொல்லுவது பிழையாகவும் இருக்கலாம்.

ஆனால் அழியும் அல்லது நிலைத்திருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நடக்க முடியாது.
அப்படி நடந்தால் அது விஞ்ஞான முரண்பாடாகும்.
அப்படித்தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவ விசுவாசியை கண்டறிய விஞ்ஞான பூர்வமான சோதனை பைபிளில் உள்ளது

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன‌
என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்
நவமான புது அந்நிய மொழி பாஷைகளை பேசுவார்கள்.

மேலும் சர்ப்பங்களை கையிலெடுப்பார்கள். சாவுக்கென்றான யாதொன்றை குடித்தாலும் அவர்களுக்கொன்றும் ஆகாது. அது அவர்களை சேதப்படுத்தாது.

வியாதியஸ்தர்கள் மீது அவர்கள் கை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.
இதை கொண்டு உண்மையான விசுவாசியை கண்டு பிடித்து விடலாம்

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 9
தொழுநோயிலிருந்து த‌ன் வீட்டை பாதுகாக்க‌ ஒரு நூத‌ன்மான‌ வ‌ழியை பைபிள் சொல்லுகிற‌து இர‌ண்டு குருவிக‌ளை எடுங்க‌ள் ஒன்றை கொன்று ம‌ர‌த்தொன்றின் மீது ஏற்றி உயிரோடிருக்கும் மற்றொரு ப‌ற‌வையை ஓடும் நீரில் ந‌னைத்து அத‌ன் பிற‌கு அந்த‌ ர‌த்த‌த்தை வீடு முழுவ‌தும் ஏழு முறை தெளிக்க‌ வேண்டும்.

தொழுநோயிலிருந்து பாதுகாக்க வீட்டுக்குள் குருவியின் இரத்தத்தை தெளிப்பதா?

மருத்துவ ரீதியாக நமக்கு தெரியும் ஒரு தாய் பிரசவித்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அசுத்தமாக இருப்பார்.

ஆண்குழந்தை பெற்றால் அவள் ஏழு நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாளாம்.அந்த அசுத்த நிலை மேலும் 33 நாட்களுக்கு நீடிக்குமாம்.

ஆனால் பெண் குழந்தையை பெற்றால் 2 வாரங்களுக்கு அசுத்தமாக இருப்பாள் ஆனால் அந்த அசுத்தம் 66 நாட்களுக்கு நீடிக்குமாம். சுருக்கமாக சொன்னால் ஒரு பெண் மகனை பெற்ரால் 40 நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாள். ஆனால் அவலே ஒரு பெண் குழந்தையை பெற்றால் 80 நாளைக்கு அசுத்தமாக இருப்பாள்.

பெண்குழந்தையை பெற்றால் ஆண்குழந்தையை விட இரு மடங்கு அதிகமாக அசுத்தம் நீடிப்பது எப்படி?

விபசாரத்தை நிரூபிக்க பைபிள் ஒரு அருமையான யோசனையை சொல்கிறது. ஒரு பெண் விபசாரம் செய்துவிட்டால் என கண்டு பிடிப்பது எப்படி ?

எண்ணாகமம் அதிகாரம் 5 11 / 31

என்ன அருமையான வழி?

சந்தேகத்துக்குள்ளாகி நீதி மன்றங்களில் அவமானத்தையும் அதிக பொருட்சிலவையும் கால
நேரத்தையும் வீணடிக்கும் தம்பதிகள் இந்த இலகுவான கசப்பு தண்ணீர் சோதனை ஏன் கடைபிடிக்கககூடாது?

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 10
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 11
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 12
நிறைவேறாத தீர்ககதரிசனம்.

பைபிள் இறைவ‌னின் வார்த்தைக‌ள் அல்ல‌

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 13
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 14
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 15
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 16
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 17
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 18
நன்றிhttp://alhidhayamediaworld.blogspot.com

Saturday, May 8, 2010

“சாதிக்கொரு நீதி”

வெள்ளி, 7 மே, 2010

“சாதிக்கொரு நீதி”

Filed under 2010 மே by அந்நஜாத்

“சாதிக்கொரு நீதி”

பெங்களூர்
M.S.கமாலுத்தீன்

பரிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல. Dr.அம்பேத்கர்

இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. தமிழகத்தில் 7,000 கிராமங்களில் இப்பிரச்சனை நீர்பூத்த நெருப்பாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபடவும் தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொதித்து போன அம்மக்கள் போராட்டம் நடத்த வழக்கம் போல் போலிஸ் தடியடி நடத்தியது. இப்பிரச்சனையை பெரிதாக்கி ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் வழக்கம் போல் முயல, அடி, உதை வாங்கிய அம்மக்களை அழைத்து பேச சொன்னது ஆளும் கட்சி. பேச்சுவார்த்தைக்குப் பின் டி.எஸ்.பி. தலைமையில் பாதுகாப்போடு வழிபட்டு வந்து விட்டார்கள். பிரச்சனை தற்காலிகமாக முடிந்தது.

ஆனால் இந்தியா முழுவதும் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை, செருப்பு போட முடியாமை, முடிவெட்டிக் கொள்ள முடியாமை, குடி தண்ணீர் எடுக்க முடியாமை, சைக்கிளில் போக முடியாமை, கோயிலுக்குள் நுழைய முடியாமை இவ்வளவு ஏன் செத்தால் கூட சுடுகாடு கொண்டு செல்ல முடியாமை என பல இயலாமைகள் இன்னும் இங்கே நிலவுகிறது. இவற்றை எல்லாம் ஒரே மையால் தீர்த்து விடலாம் என்று சொல்லித்தான் ஒவ்வொரு முறையும் ஓட்டு வாங்கி போனார்கள். எந்த பிச்சனையும் இது வரை தீர்ந்ததில்லை.

தீண்டாமை பிரச்சனை தீர்ந்து விடக் கூடாது என்பதில் எல்லா அரசியல்வாதிகளும் தீர்மானமாக உள்ளார்கள் என்பதை “”எவிடன்ஸ்” என்ற அமைப்பு தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவ கங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆய்வு செய்தது 2009 வருடம். அதில் 85 பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 69 கோயில்களில் தலித்துகளுக்கு அனுமதியில்லை. 72 கோயில்களில் உள்ளே போகலாம். சன்னிதானம் செல்ல கண்டிப்பாக அனுமதி யில்லை. 52 கோயில்களில் தலித்துகளுக்கு பரிவட்டம் கட்டப்படுவதேயில்லை. 32 கோயில் தேர் திருவிழாவின்போது வடம் பிடித்து இழுக்க அனுமதியில்லை. 64 கோயில்களில் பால் குடம், தீச்சட்டி போன்ற சடங்கின்போது பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது. இவை எல்லாம் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இல்லை. இது பற்றி கேட்டால் 1989ம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்பார்கள். இருபது ஆண்டு கால மாகிவிட்டது இச்சட்டம் இயற்றி. இதுவரை எவரையும் தண்டித்ததாக தகவல் இல்லை. தமிழகத்தில் 1535 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 3 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் இரண்டு சதவீதம் கூட வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. அப்படியே செய்தாலும் 95 சதவீத வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

திருச்செந்தூரிலிருந்து திருத்தணிவரை கும்மிடிப் பூண்டியிலிருந்து கோயமுத்தூர் வரை சாதிக்கொரு நீதி உண்டு. இதை சட்டத்தால் சரி செய்துவிட முடியாது. சமத்துவ புரங்களில் குடி அமர்த்துவதன் மூலம் சாதித்து விட முடியாது. இட ஒதுக்கீடு மூலம் வாழ்வாதாரத்தை வேண்டுமானால் வசதியாக்கலாம். ஆனால் சாதி கொடுமை? தீர்வு தான் என்ன?

புரட்சிப் பாரதத்தில் புதிய தமிழகத்தை அமைத்து விட விடுதலை சிறுத்தைகள் விருப்பம் கொள்கிறது. நீலப் புலிகளும் இதைத் தான் நினைத்தார்கள். நிறைவேறாது என்பது நிச்சயமாகத் தெரியும். பிறகு ஏன் கட்சி நடத்த வேண்டும்? பிழைப்புக்குத்தான். தந்தை பெரியார் திராவிட கட்சிகளுக்கு சொந்தமாகிவிட்டார். நாடறிந்த நல்ல தலைவர் காமராஜர் நாடார் சங்கத் தலைவராகி விட்டார். முக்குலத்தோர் முத்துராமலிங்கத் தேவரை ஜாதியின் தூதுவராக்கி விட்டார்கள். இப்படி எல்லோரும் எவரையாவது முன்னிலைப் படுத்துவது போல் தலித் கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள். இன்றைய தலித் தலைவர்கள் எவருக்கும் தங்கள் சமுதாயம் சாதி கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் துளிகூட கிடையாது. இருந்திருந்தால்
மறுபரிசீலனை செய்திருப்பார்கள்.

1920 களிலிருந்தே தந்தை பெரியார் சொன்னார் “இன இழிவை நீக்கிக் கொள்ள இந்த நிமிடமே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று. ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் ஈடேற்றத்தை இரு கண்களாலே கண்டார்கள். இவர்கள் சார்ந்திருந்த சமுதாயம் இழிவுகளோடு அவமானப்பட்டு அடியும் உதையும் வாங்கி கொண்டு ஆலய நுழைவுக்கு போராட்டம் தேவை தானா? சிந்தியுங்கள்! தொப்புள் கொடி சொந்தங்களே! இனியும் இந்த இழிவு தொடராமல் இருக்க இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகிலும் மறு உலகிலும் மகத்தான வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.

ஆளும் கட்சியும், அரசியல் வாதிகளும் உங்கள் மீது காட்டும் அக்கறை ஓட்டு வாங்கும் உள்நோக்கம் கொண்டது. அள்ளித் தரும் இலவசங்கள் “இன இழிவோடு இருக்க தரும் லஞ்சம்” என்பதை புரிந்து கொள்ளுங்கள்! உங்களையும் எங்களையும் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சொல்கிறான்,

எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயம் மாற்றுவதில்லை. அல்குர்ஆன் 13:11 இதுதான் உண்மை. உங்களுக்கு சமத்துவமும், சகோதரத்துவமும், சமநீதியும் கிடைக்க வேண்டுமானால் சாதிக் கொரு நீதி ஓழிய வேண்டுமானால் இஸ்லாத்தை ஏற்பதால் மட்டுமே விடிவு காலம் பிறக்கும். நீங்கள் ஆடுகள் அல்ல; சிங்கங்கள். சிவப்புக் கம்பள வரவேற்பு இஸ்லாத்தில் மட்டுமே உண்டு.

நன்றி:http://www.annajaath.com/


Friday, May 7, 2010

May 06, 2010

விசுவாசங் கொண்டோருக்கு அல்லாஹ்வின் ஆணை!

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்
கீழ்படிந்து நடங்கள்; நீங்கள்(அவருடைய போதனைகளைச் செவியுற்றுக்
கொண்டிருக்கும் பொழுதே) அவருடைய கட்டளைக்கு மாறு செய்து அவரை
விட்டும் திரும்பி விடாதீர்கள். (அல்குர்ஆன்:8:20)
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்