Sunday, September 20, 2009


வசந்தகாலங்களின் வாயிற்படிகள் திறக்கவேண்டும்

வருங்கால சந்ததிகள் வறுமை இல்லாத காலங்களில் சஞ்சரிக்க வேண்டும்

வஞ்சம் இல்லாத உள்ளம் பெற்று

வானவில்லின் வண்ணம் பெற்று

வண்ணமயமான எதிர்காலத்திலே பிரவேசிக்க வேண்டும்

எண்ணங்களும் எழுத்துக்களும்

இன்ன பிற செயல்களும்

எளிச்சிகளையும் மகிழ்ச்சிகளையும்

உருவாக்க வேண்டும்

வாழ்கின்ற காலம்வரை

வர்ண பேதம் இல்லாத வாழ்கையை நேசிப்போம்

அதற்காகவே சுவாசிப்போம்

இறைவனின் சாந்தியும் சமாதானமும்

அனைவர்மீதும் உண்டாக

இணைந்தே பிரார்த்திப்போம்

வஸ்ஸலாம்

இப்படிக்கு

மண்ணின் மைந்தன் எ.முகம்மது சுல்தான் (நச்சியாற்கோவில்)

No comments:

Post a Comment

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்