Thursday, December 17, 2009

assalaamu alaikkum
pj-avargalin bathilgal

கேள்வி:அழகர் கடவுள் சர்வசக்தி படைத்தவன் என அய்யா அவர்கள் சொன்னார்கள். ஆயினும் இந்நாட்டில் பிரச்னைகள் உருவாவதே கடவுளின் பெயரால்தான். வரலாற்று சிறப்பு மிக்க பாபரி மஸ்ஜிதை இடித்தது மாபெரும் குற்றம். இந்துமதக் கடவுளின் பெயரைச் சொல்லி இதைச் செய்தார்கள்.அதே போல் பாதிரியாரைக் கொன்றார்கள். கன்னியாஸ்திரிகளை கற்பழித்தார்கள். கடவுளினால் உலகம் பூராவும் பிரச்னைதான். மதப்பிரச்னை, கடவுள் பிரச்சினை அத்துடன் தீண்டாமை, ஜாதிக் கொடுமை, இந்து மதத்தில் சூத்திரப்பட்டம், தேவடியாள் மகன் என்றெல்லாம் கூறி எழுதி வைத்திருக்கிறார்கள். இது ஜயாயிரம் வருடங்களாக இருக்கிறது. இதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டு எப்படி சகிப்புத் தன்மையோடு சும்மா இருக்கிறார். இதற்கெல்லாம் என்ன தீர்வு? நாம் கடவுளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சமுதாயத்தை அமைப்பை ஏற்படுத்தி கடவுள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கலாமா?

பதில்: சண்டைகள் கடவுளின் பெயரால்தான் நடைபெறுகிறது என சகோதரர் அழகர் கூறியது உண்மைதான். இருந்தும் கடவுளின் பெயரால் மட்டும் நடைபெறவில்லை உதாரணமாக, மொழியின் பெயரால் சண்டை நடக்கிறது. இதற்கு கடவுள் கொள்கை காரணமல்ல. கடவுள் கொள்கைஇல்லாத கம்யூனிஸ்ட்களுக்கு மத்தியிலும் இடதுசாரி கம்யூனிஸ்ட், வலதுசாரி கம்யூனிஸ்ட் என சண்டை நடக்கிறது. எனவே சண்டைக்குக் காரணம் மனிதனின் வக்கிர புத்தியே தவிர கடவுள் கொள்கை அல்ல. சண்டை, சச்சரவுகளுக்கு மனிதன் கடவுள் கொள்கையைக் காரணம் காட்டுகிறான். மொழியைக் காரணம் காட்டுகிறான். இவனிடம் குடிபுகுந்துள்ள வக்கிர புத்தியைக் கூறுவதில்லை.எனவே சண்டை போடுகின்றவன் இருக்கின்ற வரை எதை வைத்தாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பான். இதை ஒழிக்க முடியாது. சகோதரரின் கேள்வியின் முக்கிய பகுதி என்னவென்றால், இவ்வளவும் நடக்கும் போது கடவுள் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்பதுதான்.பள்ளிவாசலை இடிக்கிறார்கள், பாதிரியாரை எரிக்கிறார்கள். இப்படி எவ்வளவோ நடந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் அக் கடவுளை ஓரம் கட்டிவிட்டு, கடவுள் கொள்கை இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி நாம் எல்லாவற்றையும் இல்லாதொழித்து விடலாமே! என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இரு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று கடவுள் கொள்கையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கியபின் எப்பிரச்சினையும் இல்லாத சமுதாயமாக வாழலாம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. பக்குவபட்டு சரியாக நடக்க வேண்டுமென்ற உணர்வும் எல்லா மக்களுக்கும் வந்துவிடாது. கண்டிப்பாக அது முடியாத காரியமும் கூட. ஏனெனில் கடவுள் இல்லை என ஓரம் கட்டிய பின் மனிதன் எவருக்குமே பயப்படமாட்டான். அவனவன் தத்தமது அறிவைப் பயன்படுத்தி ஒருவனுக் கொருவன் துரோகம் செய்ய முற்படுவான். அபகரிப்பான். ஊழல் புரிவான். உயர் மட்டம் இலஞ்சம் வாங்கும்.பாதகங்கள் அனைத்தும் தலை விரித்தாடும். மற்றொன்று, அநியாயங்களை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரே! எனக் கேட்டது நல்லதொரு கேள்வி. இந்த அண்டத்தைப் படைத்தது பற்றி கூறும் இறைவன் இதை ஒரு சோதனைக் கூடமாக படைத்திருப்பதாகக் கூறுகிறான். இந்த உலகு, அதன் இன்பங்கள் போன்றவற்றிற்கு ஒரு கொசுவின் இறக்கையளவுகூட இறைவனிடம் மதிப்பு இல்லையென இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவேதான் இறைவன் இவ்வுலகில் மனிதன் புரிகின்ற அநியாயங்களை, அட்இழியங்களைக் கவனித்து உடனடியாகத் தண்டிக்காது, அவனுக்கு அவகாசம் வழங்கி அக்காலப் பகுதிக்குள் அவன் திருந்தி வாழ்கிறானா? எனப் பார்க்கிறான். தண்டைனைக் குரிய இடம் மறு உலகுதான். இங்கு வந்த்திருக்கும் மக்களை கவனியுங்கள். இவர்களில் சிலர் இதற்கு முன் குற்றம் புரிந்தவர்களே! ஆனால் காலப்போக்கில்அவைகளைத் தவறெனப் புரிந்து கொண்டு திருந்தி வாழ ஆரம்பித்திருக்கின்றனர். எனவே இப்படி ஒரு அவகாசத்தை இவர்களுக்குத் கொடுக்காமல் தவறு செய்த உடனேயே, இவர்களை இறைவன் அந்த இடத்திலேயே தண்டனையாக அழித்திருந்தால் இவர்கள் இந் நிலைக்கு ஆளாகி இருப்பார்களா? எனவே குற்றத்திற்கு உடனே இறை தண்டனை என்பது பொருத்தமற்ற செயலாகவே நமது சிந்தனைக்கு படுகிறது. மனிதன் இயல்பில் தவறு புரிபவன்தான். எனினும் அவன் தனது தவறை நினைத்து திருந்தி வாழ முற்பட வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்கான சிறிய சான்றொன்றையும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அதாவது, முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற கொடுமைகள், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்ற என்னை மேலப்பாலையத்தில் ஒரு கூட்டத்தில் ஒரு சகோதரர் கொலை செய்யும் நோக்கில் எனது கழுத்தில் வெட்டியபோது அக்கத்தி இறையருளால் கையில் பட்டு சிறு காயங்களோடு நான் தப்பினேன். அல்ஹம்துலில்லாஹ். என்னை தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று வெட்ட வந்தவர் இப்போது எனது பாதுகாப்புக்கு எனக்கு துணையாக வந்திருக்கிறார். அன்றே அவரைப் பிடித்து காலி செய்திருந்தால் நிலமை என்னவாயிருக்கும்? எனவே மன்னித்து அவகாசம் கொடுப்பவராக நாமே இருக்கும்போது மிக்க கருணையுள்ள இறைவன் எப்படி உடனே தண்டிப்பான்? இங்கு இருக்கக்கூடிய யாரவது நான் எந்தத் தவறும் இதுவரை செய்யவில்லை என துணிந்து கூறுங்கள் பார்க்கலாம். முடியாது. நிச்சயமாக முடியாது. இறைவன் உடனே தண்டிக்க வேண்டுமென விரும்பினால் நம் அனைவரையும் என்றோஅழித்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் இப்புவியில் என்றோ மனித இனம் அழிந்து இருக்கும். ஆகவே புரிகின்ற தவறுகளுக்கு மறுமை நாளில் தண்டனை உண்டு என்ற நினைப்பு மனிதனுக்கு வந்து விடுமானால், ஒழுக்கமுள்ள வாழ்க்கையாக அவனது வாழ்வு மாறிவிடும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
நன்றி : http://www.readislam.net/
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்