Sunday, August 19, 2012

ஈகை திருநாள்! நம்மை இணைக்கும் திருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும் 
அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துகள் 
பிரிவுகள் வேண்டாம் 
இயக்க பேதம் இன்றி 
இன்னல்கள் நீங்கி 
இணைந்தே இருப்போம்,

பிரிந்ததும் போதும் அதனால் இந்த சமுதாயம் 
இழந்ததும் போதும் 
தனது இன் உயிரையும் துறந்தார்கள் நபி தோழர்கள் 
இந்த உம்மத்தை இணைத்திட வேண்டி 

இந்த ஈகை திருநாளில் 
இணைந்தே எடுத்திடுவோம் 
இணை இல்லா சபதம் ஒன்றை 

எங்கள் கருத்துகள் வேறுபடலாம் 
எங்கள் கட்சிகள் வேறுபடலாம்   ஆனால் 
எங்கள் ஒற்றுமை என்கின்ற களம் 
ஒரு பொழுதும் வேறுபடாது என்று 
இன்றே சபதம் ஏற்போம் 

பிரிவினை என்கின்ற நச்சு விதையை 
வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றிட 
இன்றே இணைந்திடுவோம் 
இணை இல்லா சமுதாய ஒற்றுமைக்கு 

வறுமைகள் நீங்கிட 
வல்லமை பெருகிட 
வான்  புகழ் இறையோனை 
வாஞ்சையோடு புகழ்ந்திட 
வள்ளல் நபியின் வாழ்வுதனை 
நெறி பிறழாமல் தொடர்ந்திட 

ஏக இறையோனை இணைந்தே 
பிரார்த்திப்போம் 

 
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்